• Mar 29 2024

மகிமையின் கிண்ணம் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த மெசியா விளையாட்டு கழகம்!

Sharmi / Jan 30th 2023, 4:41 pm
image

Advertisement

பூநகரி, நாச்சிக்குடா குழந்தை இயேசு விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மகிமையின் கிண்ணம் வெற்றிக் கிண்ணத்தை வலைப்பாடு மெசியா விளையாட்டுக் கழகம் தனதாக்கியுள்ளது.

பூநகரி உதைபந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் நாச்சிக்குடா குழந்தை யேசு விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட வடமாகாண ரீதியான, அணிக்கு 09 பேர் கொண்ட மகிமையின் கிண்ணம் சுற்றுப்போட்டி கடந்த சில வாரங்களாக இடம்பெற்றிருந்தன.

38 அணிகள் பங்குபற்றியிருந்த  குறித்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றிருந்த நிலையில், இறுதியாட்டத்தில் மன்னார் கில்லறி அணி எதிர் வலைப்பாடு மெசியா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற குறித்த போட்டியில், இரு அணிகளும் ஆட்ட நேரத்தில் எந்த விதமான கோல்களும் பெறாத நிலையில் தண்ட உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்படும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டன.

அதன்படி, 03:01 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற வலைப்பாடு மெசியா விளையாட்டுக் கழகம் வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கியது.

இப்போட்டியில்வெற்றி பெற்ற மெசியா அணிக்கு வெற்றிக் கேடயம் மற்றும் பணப்பரிசில் ஆகியன வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை, போட்டியின் சிறந்த கோல்க் காப்பாளராக மெசியா அணியின் நட்சத்திர கோல்க் காப்பாளர் றொஷாரி தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மகிமையின் கிண்ணம் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த மெசியா விளையாட்டு கழகம் பூநகரி, நாச்சிக்குடா குழந்தை இயேசு விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மகிமையின் கிண்ணம் வெற்றிக் கிண்ணத்தை வலைப்பாடு மெசியா விளையாட்டுக் கழகம் தனதாக்கியுள்ளது.பூநகரி உதைபந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் நாச்சிக்குடா குழந்தை யேசு விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட வடமாகாண ரீதியான, அணிக்கு 09 பேர் கொண்ட மகிமையின் கிண்ணம் சுற்றுப்போட்டி கடந்த சில வாரங்களாக இடம்பெற்றிருந்தன. 38 அணிகள் பங்குபற்றியிருந்த  குறித்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றிருந்த நிலையில், இறுதியாட்டத்தில் மன்னார் கில்லறி அணி எதிர் வலைப்பாடு மெசியா அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற குறித்த போட்டியில், இரு அணிகளும் ஆட்ட நேரத்தில் எந்த விதமான கோல்களும் பெறாத நிலையில் தண்ட உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்படும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டன. அதன்படி, 03:01 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற வலைப்பாடு மெசியா விளையாட்டுக் கழகம் வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கியது. இப்போட்டியில்வெற்றி பெற்ற மெசியா அணிக்கு வெற்றிக் கேடயம் மற்றும் பணப்பரிசில் ஆகியன வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை, போட்டியின் சிறந்த கோல்க் காப்பாளராக மெசியா அணியின் நட்சத்திர கோல்க் காப்பாளர் றொஷாரி தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement