• Mar 29 2024

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Dec 10th 2022, 1:18 pm
image

Advertisement

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் கிரவுண்ட் சர்வீசஸ் நிர்வாகத்தை ஏதேனும் முதலீட்டாளருக்கு அல்லது தனித்தனியாக வழங்குவது குறித்து விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்

அந்த நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான வழிகாட்டுதல்களை திறைசேரியின் குழுவொன்று வழங்கும் என்றும் அதன் பின்னர் அமைச்சரவை இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தப்படும் என்றும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

பெருந்தொகையில் புரளும் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என கூறிய அமைச்சர், நிறுவனத்தை மறுசீரமைப்பதை மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே எதிர்க்கிறது என்றார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளதாகவும், விமான சேவைக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் கிரவுண்ட் சர்வீசஸ் நிர்வாகத்தை ஏதேனும் முதலீட்டாளருக்கு அல்லது தனித்தனியாக வழங்குவது குறித்து விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்அந்த நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான வழிகாட்டுதல்களை திறைசேரியின் குழுவொன்று வழங்கும் என்றும் அதன் பின்னர் அமைச்சரவை இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.இந்த நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தப்படும் என்றும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.பெருந்தொகையில் புரளும் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என கூறிய அமைச்சர், நிறுவனத்தை மறுசீரமைப்பதை மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே எதிர்க்கிறது என்றார்.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளதாகவும், விமான சேவைக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement