சிங்கள பௌத்த தீவிரவாதிகள் இலங்கை இந்திய ஒப்பந்தமான 13ஆம் திருத்த சட்டத்தை எதிர்ப்பார்களாயின் சர்வதேசத்தின் ஊடாக பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமென தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு எச்ச்சரிக்கை விடுத்திருந்தார்.
இலங்கை தீவுக்குள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி நசுக்குகின்ற செயற்பாட்டினை சிங்கள பௌத்த தீவிரவாதிகள் முன்னெடுப்பதை போன்று சிங்கள கிறிஸ்தவர்களையும் இவர் நசுக்க முற்படுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக செல்லவேண்டும் என்றால் சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களை இந்த தீவில் அடக்கி ஒடுக்குவதற்கே பௌத்த பேரினவாதம் முற்படுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே 75ஆவது சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிப்பதற்கு தமது பூரணமான ஆதரவை வழங்கியுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்த தீவிரவாதிகளை எச்சரித்த எம்.கே.சிவாஜி – சர்வதேசம் தலையிடும் நிலை ஏற்படும். சிங்கள பௌத்த தீவிரவாதிகள் இலங்கை இந்திய ஒப்பந்தமான 13ஆம் திருத்த சட்டத்தை எதிர்ப்பார்களாயின் சர்வதேசத்தின் ஊடாக பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமென தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு எச்ச்சரிக்கை விடுத்திருந்தார்.இலங்கை தீவுக்குள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி நசுக்குகின்ற செயற்பாட்டினை சிங்கள பௌத்த தீவிரவாதிகள் முன்னெடுப்பதை போன்று சிங்கள கிறிஸ்தவர்களையும் இவர் நசுக்க முற்படுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக செல்லவேண்டும் என்றால் சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களை இந்த தீவில் அடக்கி ஒடுக்குவதற்கே பௌத்த பேரினவாதம் முற்படுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.இதன் காரணமாகவே 75ஆவது சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிப்பதற்கு தமது பூரணமான ஆதரவை வழங்கியுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.