• Sep 30 2024

மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு! samugammedia

Chithra / Aug 16th 2023, 12:51 pm
image

Advertisement

பதுளை - ஹல்துமுல்ல, மலடோல பிரதேசத்தில் காட்டு யானைகளிடமிருந்து வயலைப் பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி பெண் ஒருவர் இன்று (16) காலை உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் ஹல்துமுல்ல, மலதோல, மெதகெதரவில் வசித்து வந்த அறுபது வயதுடைய ரத்நாயக்க முதியன்சேலாகே பொடிமணிகே என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

தனது வயலைப் பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியை தவறுதலாக தொட்டதில் குறித்த பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு samugammedia பதுளை - ஹல்துமுல்ல, மலடோல பிரதேசத்தில் காட்டு யானைகளிடமிருந்து வயலைப் பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி பெண் ஒருவர் இன்று (16) காலை உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர் ஹல்துமுல்ல, மலதோல, மெதகெதரவில் வசித்து வந்த அறுபது வயதுடைய ரத்நாயக்க முதியன்சேலாகே பொடிமணிகே என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.தனது வயலைப் பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியை தவறுதலாக தொட்டதில் குறித்த பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement