• Sep 28 2024

மொட்டு கட்சி திருடர்களைக் கொண்டு அரசியல் செய்யவில்லை...! சபையில் பிரசன்ன ரணதுங்க கருத்து...!samugammedia

Sharmi / Nov 30th 2023, 1:18 pm
image

Advertisement

மொட்டு கட்சி திருடர்களைக் கொண்டு அரசியல் செய்யவில்லை எனவும்,  நாட்டை வங்குரோத்து செய்தது எதிர்க்கட்சியே எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.

பாராளுமன்றத்தில் இன்று(30) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வாரங்களாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை எதிர்க்கட்சியினர் தம்முடைய தேவைக்குப் பயன்படுத்தி விட்டு இல்லாமல் ஆக்கி விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியினர் அவர்தான் பொது வேட்பாளர் என்ற சந்தேகத்தில் கலக்கமடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்த திருடர்களுடன் மொட்டு கட்சி  மக்கள் அரசியல் செய்யவில்லை. அதனால்தான் ரொஷான் ரணசிங்கவை அந்தப் பக்கம் அனுப்பினோம் எனவும் தெரிவித்தார்.



மொட்டு கட்சி திருடர்களைக் கொண்டு அரசியல் செய்யவில்லை. சபையில் பிரசன்ன ரணதுங்க கருத்து.samugammedia மொட்டு கட்சி திருடர்களைக் கொண்டு அரசியல் செய்யவில்லை எனவும்,  நாட்டை வங்குரோத்து செய்தது எதிர்க்கட்சியே எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.பாராளுமன்றத்தில் இன்று(30) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த இரண்டு வாரங்களாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை எதிர்க்கட்சியினர் தம்முடைய தேவைக்குப் பயன்படுத்தி விட்டு இல்லாமல் ஆக்கி விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியினர் அவர்தான் பொது வேட்பாளர் என்ற சந்தேகத்தில் கலக்கமடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை இந்த திருடர்களுடன் மொட்டு கட்சி  மக்கள் அரசியல் செய்யவில்லை. அதனால்தான் ரொஷான் ரணசிங்கவை அந்தப் பக்கம் அனுப்பினோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement