முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நினைவுகூறப்பட்டது.
அந்தவகையில் இன்றையதினம் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் உள்ள தீருவில் துயிலுமில்ல வளாகத்தில் சமூக செயற்பாட்டாளர்களான பீற்றர் இளஞ்செழியன் மற்றும் நிசாந்தன் ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை இன்றைய தினமும் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று அழிக்கப்பட்ட போது உணவின்றி தவித்த வேளையில் அவர்களுக்கு உயிர்காத்த உணவாகிய கஞ்சி வழங்குகின்ற நிகழ்வுகளும் வடக்கு கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.