ஈழத்துக் கலைஞர்களின் உருவாகிய பொய் மான் முளு நீளத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (11) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கேட்போர் கலையரங்கத்தில் இடம்பெற்றது.
டாக்டர். ஜெயமோகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத் திரைப்படம் எதிர்வரும் மாதமளவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பண்பாட்டு கலை நிகழ்வுகளின் உள்ளடக்கத்துடன் திரைப்படத்தில் வகிபாகம் பெறுவோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் ஈழத்துக் கலைஞர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.