பிக்பாஸ் போட்டியில் கமல் செய்த செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 100 நாட்களை வெற்றிகரமான முடித்து நிறைவடைந்துள்ளது. இதில் நடிகர் ஆரி அர்ஜுனா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலா ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் குறித்து பல்வேறு பதிவுகள் இணையத்தில் உலாவி வருகின்றன. அதில் குறிப்பாக கமல் செய்த செயல் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், போட்டியின் நடுவே சில புத்தகங்களையும் ரசிகர்களுக்கு பரிந்துரைத்தபடி இருந்தார். அவர் சொன்ன புத்தகங்களை சிலர் வாங்கி படிக்கவும் செய்தனர்.
மேலும் இந்நிலையில் கமல் போட்டியில் பரிந்துரைத்த ”செல்வேந்திரன் எழுதிய வாசிப்பது எப்படி” என்ற புத்தகம், அவர் சொன்ன 2 மணி நேரத்தில் 500 பிரதிகளுக்கும் மேல் ஆன்லைன் தளங்களில் விற்பனையாகியுள்ளது.
அத்தோடு கமல் சொன்ன பல்வேறு புத்தகங்களை ரசிகர்கள் இப்போது ஆர்வமாக வாங்கி வருவதாகவும், அப்புத்தகங்களின் டிமான்ட் அதிகரித்திருப்பதால், அவை மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் சில தெரிவிக்கின்றனர்.
பொழுது போக்கு நிகழ்ச்சி என்று நில்லாமல், அதில் சமூகத்திற்காக நல்ல புத்தகங்களையும் பரிந்துரைத்த கமலின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பிற செய்திகள்:
- பரிசுத் தொகையை விட ஆரி 105 நாளுக்கான பெற்ற சம்பளம் அதிகம்; எவ்வளவு தெரியுமா ?
- ஹேமந்ததே தான் காரணம்-நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆதாரம்!
- ரம்யா பாண்டியனின் வருகையை பட்டாசு வெடித்து மாஸாக கொண்டாடிய குடும்பம்!
- பிக்பாஸ் பாலாவிற்காக கதறி கதறி அழும் சிறுவன்; ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோ
- பிக்பாஸுக்கு பிறகு ஆரி நடிக்கப் போகும் முதல் படம்; ஹீரோயின் யார் தெரியுமா..?
- பாலாஜியின் பதிவிற்கு உருக்கமாக பதிலளித்த ஷெரின்..!
- பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் துள்ளிக் குதித்து பாலா செய்த காரியம்-தீயாய் பரவும் காணொளி
- பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் பார்டியில் ஈழத்து தமிழ் ரசிகர்களுக்கு காத்திருந்த வியப்பு!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்