இறப்பர் தோட்டங்களில் காணப்படும் காட்டுச் செடிகளைப் பயன்படுத்தி காகிதத்தை உற்பத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் ஆரம்ப கட்டத்தின் ஒரு பகுதியாக கேகாலை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆலோசனை சேவைகளின் பணிப்பாளர் சஞ்சீவ குணரத்ன தெரிவித்துள்ளார்.