• Apr 19 2024

மக்களே அவதானம்..! வடக்கு உட்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 19th 2023, 7:12 am
image

Advertisement

இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் ,வடமத்திய மாகாணம், மொனராகலை, மற்றும் குருநாகல் மாவட்டம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்ப்பதுடன் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அத்துடன் சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


மக்களே அவதானம். வடக்கு உட்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் ,வடமத்திய மாகாணம், மொனராகலை, மற்றும் குருநாகல் மாவட்டம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த மாவட்டங்களில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே மக்கள் வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்ப்பதுடன் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement