திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் பாலத்தில் வைத்து
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு அம்பாறை
-முல்லைத்தீவு தனியார் பஸ்ஸொன்றை இடைமறித்து இன்று வெள்ளிக்கிழமை காலை
சோதனையிட்டபோது ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக ஈச்சிலம்பற்று பொலிஸார்
தெரிவித்தனர்.
இதன்போது 34 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்
பொருளுடன் 31 வயதுடைய சேருநுவர பகுதியைச் சேர்ந்த குறித்த பஸ் சாரதியும்,
பஸ் நடத்துனரான மூதூர் -இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர்
ஒருவருமாக இருவரை ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பஸ் வண்டி ஈச்சிலம்பற்று பொலிஸில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த
சந்தேக நபர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான
ஏற்பாடுகளையும், மேலதிக விசாரணைகளையும் ஈச்சிலம்பற்று பொலிஸார்
முன்னெடுத்துள்ளனர்.