உக்ரைனுக்கு 15.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்டத்திலான கடன் தொகையை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு கடன் வழங்குவது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை நாட்டின் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக திறைசேரிக்கு மாற்றுவதற்குசர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதேசமயம் இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளை மத்திய வங்கியின் டொலர் கணக்கில் மாத்திரமே வைப்பு செய்ய முடியும் என்ற நிலை காணப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் இன்று சபையில் தெரிவித்திருந்தார்.
உக்ரைனுக்கு 15.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியது - சர்வதேச நாணய நிதியம் SamugamMedia உக்ரைனுக்கு 15.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்டத்திலான கடன் தொகையை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு கடன் வழங்குவது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் இன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை நாட்டின் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக திறைசேரிக்கு மாற்றுவதற்குசர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதேசமயம் இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளை மத்திய வங்கியின் டொலர் கணக்கில் மாத்திரமே வைப்பு செய்ய முடியும் என்ற நிலை காணப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் இன்று சபையில் தெரிவித்திருந்தார்.