வடக்கு சீனாவை தாக்கிய மணல் புயல் காரணமாக சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை நண்பகலில் 100 மீட்டர் உயரமுள்ள மணல் புயல் ஜாங்கியே நகரில் உள்ள ஷான்டன் கவுண்டியில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக சீனாவின் 10இற்கும் மேற்பட்ட மாகாணங்களில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சீனாவில் ஏற்படும் மிக்க கடுமையான மணல் புயலாக இது இருக்கலாம் என உயர்மட்ட வானிலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.