வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு திருமுருகன், ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ்ப் பிரிவு ஊடகப் பேச்சாளர் உமாச்சந்திர பிரகாஷ் உள்ளிட்டோர் இன்றைய தினம் (17) சென்று பார்வையிட்டார்.
குறித்த ஆலயம் அமைந்திருந்த இடத்தில் எதிர்வரும் பங்குனி உத்தர தினத்தன்று ஏப்ரல் 6ம் திகதி வியாழக்கிழமை சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.