சிங்கம் போன்று வேடமிட்டுள்ள அரசியல் நரிகளின் கருத்துக்களுக்கு புத்திசாலிகளான சிங்கள பெரும்பான்மையின மக்கள் ஏமாறமாட்டார்கள்.அஸாத்சாலி போன்ற அரசியல்வாதிகள் சிங்கள- முஸ்லிம் சமூகத்திற்கிடையில் இனவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் தேட முனைகிறார்கள்.
மேலும் இவ்வாறான செயற்பாடு ஒருபோதும் வெற்றிப்பெறாது என பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.களுத்துறை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதா,தகனம் செய்வதா என்ற விடயத்தில் அரசியல் தலையீடுகள் ஏதும் இல்லாமல் சுகாதார தரப்பினரால் சிறந்த தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.சுகாதார பிரிவினரின் தீர்மானத்தை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் முரண்பட்டுக் கொள்வது பயனற்றது.
அதடதோடு அஸாத்சாலி போன்றோர் அரசியல் சுயதேவைக்காக சிங்கள- முஸ்லிம் மக்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்த முனைகிறார்கள்.பல வழிமுறைகளில் பலம் கொண்டு செயற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பினை தோற்கடித்து பிரிவினைவாதம் முடிவுக்கு கொண்டு வந்தது.
இலங்கையில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கும்,தனிநபர்களுக்கும்,அடிப்படைவாத அமைப்புக்களுக்கும் விடுதலை புலிகளின் நிலைமையை ஏற்படுத்த அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது.மேலும் கடந்த அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தையும், தேசிய பாதுகாப்பினையும் திட்டமிட்டு பலவீனப்படுத்தியது. நல்லாட்சியின் பலவீனம் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் வெளிப்பட்டது.
நல்லாட்சியின அதிகாரம் செலுத்தியவர்கள் இன்று எதிர்க்கட்சியாக செயற்படுகிறார்கள்.இவர்கள் தற்போது அரசியலுக்கு ஏதோ புதிதாக வந்துள்ளமை போன்று கருத்துரைக்கிறார்கள்.சிங்கம் போன்று வேடமிட்டுள்ள நரிகளின் கருத்துக்களுக்கு சிங்கள பெரும்பான்மையினை மக்கள் ஏமாற்றமடையமாட்டார்கள்.
அத்தோடு நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தை அறிந்தே நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார்கள்.அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எவ்வித பாதிப்பையும் அரசாங்கத்தில் ஏற்படுத்தாது என்றார்.
பிற செய்திகள்:
- செல்போனில் பேசியபடி சென்ற தமிழ் பெண்.. நொடியில் ‘கிரில் சிக்கன்’ மெஷினால் நடந்த அதிர்ச்சி.. பரபரக்க வைத்த சம்பவம்..!
- விமானநிலையம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
- பக்தர்களை வரவேற்று ஆசி வழங்கும் நாய்! வைரலாகும் காணொளி
- முள்ளிவாய்க்காலுக்கு மட்டும் தூபி வேண்டாம்; பொதுத்தூபி அமைப்போம்: ஈ.பி.டி.பி!
- இலங்கையில் புதிய வகை கொரோனா; மக்களே எச்சரிக்கை!
- காதலித்த பெண்ணை ஏமாற்றிய யாழ் இளைஞன்? தற்போது அந்த பெண் பிக்பாஸ் வீட்டுக்குள்!
- ‘காதலிக்க ஒரு துணை தேவை’ சூட்சுமமான விளம்பரம் மூலம் விபசாரம்-9 பேர் கைது!
- இலங்கை வரும் பயணிகளுக்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விசேட அறிவிப்பு!
- யாழில் கடும் மழை காரணமாக 1047 பேர் பாதிப்பு!
- விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான கருப்பு பெட்டி சிக்கியது, விமானத்தின் விமானி குறித்த பரபரப்பு தகவல்கள்!
- அந்த வீடியோ பக்கா ஸ்கிரிப்ட்’… ‘என்ன என்னெல்லாம் பேச சொன்னாங்க தெரியுமா’… உண்மையை போட்டுடைத்த வைரல் பெண்!
- தடுப்பை உடைத்து வெளியே பாய்ந்த ரயிலை தாங்கிப் பிடித்த திமிங்கிலம்; தற்போது வெளியான தகவல்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்