• Apr 18 2024

இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு; ஜனாதிபதி - கூட்டமைப்பு இன்று சந்திப்பு!

Chithra / Jan 5th 2023, 7:09 am
image

Advertisement

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று வியாழக்கிழமை மாலை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாகத் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இனப் பிரச்சினை தீர்வுக்கான பேச்சு எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்தப் பேச்சு தொடர்பான முன்னாயத்த நடவடிக்கையாகவே இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

சர்வகட்சி சந்திப்பின் பின்னர் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி தமிழ்த் தேசியத் தரப்பு கட்சிகளை ஜனாதிபதி சந்தித்தார். இந்தச் சந்திப்புக்கான அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோவுக்கும் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கும் சுமந்திரன் எம். பியே விடுத்தார்.

போதிய அவகாசம் இல்லாத அதேசமயம், தமக்கு ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படாதது குறித்து விக்னேஸ்வரன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தநிலையிலேயே நாளைய சந்திப்புக்குத் தமிழ்த் தேசிய கட்சிகளின் சகல தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நேரடியாக அழைப்பை விடுத்துள்ளார்.

இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்குபற்றுவர். சி.வி. விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளமையால் இந்தச் சந்திப்பில் பங்கேற்கமாட்டார் என்று அறியமுடிகின்றது.

இதேவேளை, இன்றைய சந்திப்பில் அரச தரப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்பர் என்று கூறப்படுகின்றது.

இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு; ஜனாதிபதி - கூட்டமைப்பு இன்று சந்திப்பு தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று வியாழக்கிழமை மாலை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாகத் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.இனப் பிரச்சினை தீர்வுக்கான பேச்சு எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்தப் பேச்சு தொடர்பான முன்னாயத்த நடவடிக்கையாகவே இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.சர்வகட்சி சந்திப்பின் பின்னர் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி தமிழ்த் தேசியத் தரப்பு கட்சிகளை ஜனாதிபதி சந்தித்தார். இந்தச் சந்திப்புக்கான அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோவுக்கும் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கும் சுமந்திரன் எம். பியே விடுத்தார்.போதிய அவகாசம் இல்லாத அதேசமயம், தமக்கு ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படாதது குறித்து விக்னேஸ்வரன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தநிலையிலேயே நாளைய சந்திப்புக்குத் தமிழ்த் தேசிய கட்சிகளின் சகல தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நேரடியாக அழைப்பை விடுத்துள்ளார்.இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்குபற்றுவர். சி.வி. விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளமையால் இந்தச் சந்திப்பில் பங்கேற்கமாட்டார் என்று அறியமுடிகின்றது.இதேவேளை, இன்றைய சந்திப்பில் அரச தரப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்பர் என்று கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement