வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தமிழர் விடுதலைக்கூட்டணி இன்று (20) வேட்புமனுவை தாக்கல் செய்தது.
கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகி சபேசன் கணேசநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் மாநகரசபையில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.