மணலை உருக்கினால் தங்கமாக மாறும் என்று கூறி, 4 கிலோ மணலை ரூபாய் 50 லட்சத்துக்கு நகைக்கடைக்காரரிடம் விற்பனை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் புனேயில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளனர்.
மணலை உருக்கினால் தங்கமாக மாறும் என்று கூறி, 4 கிலோ மணலை ரூபாய் 50 லட்சத்துக்கு நகைக்கடைக்காரரிடம் விற்பனை செய்த மோசடி கும்பல் புனேயில் பிடிபட்டது.
புனே அருகேயுள்ள ஹதப்சரில், மூன்று பேர், மணலை சூடேற்றினால் தங்கமாக மாறும் என்று கூறி, ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ .49.92 லட்சம் மோசடி செய்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின்படி குற்றம் சாட்டப்பட்ட மூன்றுபேரில், ஒருவர் ஒரு வருடத்திற்கு முன்பு தங்க மோதிரத்தை வாங்க இந்த நகைக்கடைக்கு வந்திருந்தார். அவர் நகைக்கடைக்காரரின் குடும்பத்தினருடன் பழகினார், அவரின் வீட்டுக்கு குடும்ப பால் பொருட்கள், அரிசி மற்றும் பிற பொருட்களை வாங்கி தந்து உதவி செய்துள்ளார் என்று தெரிவித்தனர்.
குற்றவாளிகள் நான்கு கிலோ எடைகொண்ட மணலை, நகைக்கடைக்காரரிடம் கொடுத்ததாகவும், இந்த மணலை வங்காளத்திலிருந்து பெற்றதாகவும், மணலை எரித்ததும் அது தங்கமாக மாறும் என்றும் குற்றவாளிகள் நகைக்கடைக்காரரிடம் கூறினார்கள் என தெரிகிறது.
பின்னர் நகைக்கடைக்காரர் மணலுக்கு தீ வைத்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.
எவ்வாறாயினும் குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.
பிற செய்திகள்:
- வகுப்பறையில் மயக்கமுற்ற மாணவருக்கு நேர்ந்த கதி..!
- இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தந்தையா? சிக்னல் சந்தியில் நடந்த நெகிழ்வு சம்பவம்!
- இலங்கையர்களுக்கு நற்செய்தி-வெகு விரைவில் எங்களுக்கும் தடுப்பூசி!
- “இந்த 4 கிலோ மணலும்… அப்படியே தங்கமா மாறும் பாருங்க” – கூட்டாளிகளுடன் சேர்ந்து நண்பனே ஏமாற்றிய கதை…
- சிறுமிக்கு சித்தப்பாவால் நடந்த கொடூரம்; நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு
- ஜோ பைடன் இறந்தால் தமிழ் பெண் கமலா ஹாரிஸின் நிலை மாறும்; சட்டம் சொல்லும் உண்மை!
- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஜோ பைடன்; இப்படியும் ஒரு ஜனாதிபதியா? வியக்கும் உலக மக்கள்!
- “சசிகலாவின் தற்போதைய நிலை தொடர்பில் வெளியான தகவல்!
- திருகோணமலைக்கு சீமெந்து ஏறிச்ச சென்ற கப்பல் திடீர் விபத்து!
- தாயின் கை தவறியதால் பறிபோன குழந்தை!
- இலங்கை தமிழ் ஊடகங்களில் திடீரென பதவி விலகிய பிரபலங்கள்-மர்மம் என்ன?
- தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் பாடசாலை மாணவர்கள்!
- பதுளை-வலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் வெளியான செய்தி!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்