சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த இலங்கையர்கள் 300 பேர் வியட்நாம் அருகே படகு பழுதடைந்ததால விய்ட்நாமில் தங்க வைப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அங்கு தங்கவைக்கபப்ட்டிருந்தவர்கள் நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாட்டுக்கு தாம் மீளவும் திருப்பி செல்ல போவதில்லை என தெரிவித்து இருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அதில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.
வியட்நாம் நாட்டில் மரணமடைந்த,சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் நேற்றையதினம் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று(18) யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.