9வது பாராளுமன்றத்தின் 3வது அமர்வு இன்று (27) இரவுடன் நிறைவடைகிறது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, 75 ஆவது சுதந்திர தினத்தின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவார்.