• Apr 25 2024

பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியை கைது!

crownson / Dec 3rd 2022, 1:47 pm
image

Advertisement

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பாலக்கரை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது.

1ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 32 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியிலுள்ள கழிவறைகளை பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணி  பள்ளியில்  பயிலும் பட்டியலின மாணவ மாணவிகளை கொண்டு சுத்தம் செய்யவைத்ததாக எழுந்த புகாரை அடுத்து.

இது தொடர்பாக மாணவ மாணவியின் பெற்றோர்கள் பெருந்துறை காவல்துறையினர் மற்றும் பெருந்துறை வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

புகாரைத்தொடர்ந்து  பவானி, சென்னிமலை, பெருந்துறை வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பள்ளியில்  மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பள்ளி ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியை கீதாராணி மீது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியது, ரசாயன பொருட்களை சிறுவர்களை கொண்டு கவனக்குறைவாக கையாள செய்வது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் தலைமறைவானார்.

இந்நிலையில் இன்று அதிகாலை தலைமறைவாக இருந்த கீதாராணியை பெருந்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின் தலைமை ஆசிரியை கீதாராணியை பெருந்துறை நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர்.

பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியை கைது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பாலக்கரை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது.1ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 32 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியிலுள்ள கழிவறைகளை பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணி  பள்ளியில்  பயிலும் பட்டியலின மாணவ மாணவிகளை கொண்டு சுத்தம் செய்யவைத்ததாக எழுந்த புகாரை அடுத்து.இது தொடர்பாக மாணவ மாணவியின் பெற்றோர்கள் பெருந்துறை காவல்துறையினர் மற்றும் பெருந்துறை வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். புகாரைத்தொடர்ந்து  பவானி, சென்னிமலை, பெருந்துறை வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பள்ளியில்  மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பள்ளி ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் தலைமை ஆசிரியை கீதாராணி மீது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியது, ரசாயன பொருட்களை சிறுவர்களை கொண்டு கவனக்குறைவாக கையாள செய்வது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் தலைமறைவானார்.இந்நிலையில் இன்று அதிகாலை தலைமறைவாக இருந்த கீதாராணியை பெருந்துறை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு பின் தலைமை ஆசிரியை கீதாராணியை பெருந்துறை நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement