இன்றையதினம் (20) தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் புதிய வலைப்பந்தாட்ட மைதான திறப்புவிழா நடைபெற்றது.
2021ம் ஆண்டு, நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மைதானம் அமைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவியை வகித்த காலகட்டத்தில் அவரது வேண்டுகோளிற்கு இணங்க இந்த மைதானத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பாடசாலை அதிபர், பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.