• Sep 29 2024

ஜனாதிபதி, ஓடி ஒழிவதற்காகவே பாலங்களையும் வோக்குகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளார் - சாணக்கியன் சாட்டை! SamugamMedia

Tamil nila / Mar 2nd 2023, 5:12 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பாலத்தில் கறுப்பு சுதந்திர தின போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்திய பின்னர் பாலங்கள் கால்வாய்கள் வீதிகள் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  


அத்தியாவசிய சேவையாக மாற்றியுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.


கழிவு நீர்வெளியேற்றப்படும் கால்வாய், வோக்குகள் கூட இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஓடி ஒழிப்பதற்காக இந்த வோக்குகளை அத்தியாவசிய சேவையாக அறித்துள்ளாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.


சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோஇந்த சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் சிலவேளைகளில் தேவைப்படாது என்றும் சீனாவிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வர ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றார்.

அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தேவைப்படாது என கூறுகின்றார்.

 

சர்வதேச நாணய நிதியத்தினை காட்டிகாட்டி மக்களை ஏமாற்றுவதுடன் தேர்தலையும் பிற்போட்டு பொருளாதாரத்தினை நல்ல நிலைக்கு கொண்டுவரலாம் என்று ஜனாதிபதி கருதுகின்றாரானால் அவரை யாரோ ஏமாற்றுகின்றார்கள்.


கோத்தபாய ராஜபக்சவையும் இவ்வாறான பொய்களை கூறியே ஏமாற்றினார்கள். கோத்தபாய ராஜபக்ஸ சேதனை பசளை ஊடாக நாட்டின் வருமானம் அதிகரிக்கும் என்றுகூறினார்.


ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முட்டாள் ஒருவரும் மில்லியனர் பில்லியனர் உருவாகபோகின்றார்கள் என்று கூறியிருந்தார்.


அவ்வாறான முட்டாள்களான இராஜாங்க அமைச்சர்களையும் ஆலோசகர்களையும் வைத்திருந்தால்தான் கோட்டாபய பதவியில்லாமல்போகும் சூழல் ஏற்பட்டதாக இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, ஓடி ஒழிவதற்காகவே பாலங்களையும் வோக்குகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளார் - சாணக்கியன் சாட்டை SamugamMedia மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பாலத்தில் கறுப்பு சுதந்திர தின போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்திய பின்னர் பாலங்கள் கால்வாய்கள் வீதிகள் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  அத்தியாவசிய சேவையாக மாற்றியுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.கழிவு நீர்வெளியேற்றப்படும் கால்வாய், வோக்குகள் கூட இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஓடி ஒழிப்பதற்காக இந்த வோக்குகளை அத்தியாவசிய சேவையாக அறித்துள்ளாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோஇந்த சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் சிலவேளைகளில் தேவைப்படாது என்றும் சீனாவிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வர ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றார்.அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தேவைப்படாது என கூறுகின்றார். சர்வதேச நாணய நிதியத்தினை காட்டிகாட்டி மக்களை ஏமாற்றுவதுடன் தேர்தலையும் பிற்போட்டு பொருளாதாரத்தினை நல்ல நிலைக்கு கொண்டுவரலாம் என்று ஜனாதிபதி கருதுகின்றாரானால் அவரை யாரோ ஏமாற்றுகின்றார்கள்.கோத்தபாய ராஜபக்சவையும் இவ்வாறான பொய்களை கூறியே ஏமாற்றினார்கள். கோத்தபாய ராஜபக்ஸ சேதனை பசளை ஊடாக நாட்டின் வருமானம் அதிகரிக்கும் என்றுகூறினார்.ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முட்டாள் ஒருவரும் மில்லியனர் பில்லியனர் உருவாகபோகின்றார்கள் என்று கூறியிருந்தார்.அவ்வாறான முட்டாள்களான இராஜாங்க அமைச்சர்களையும் ஆலோசகர்களையும் வைத்திருந்தால்தான் கோட்டாபய பதவியில்லாமல்போகும் சூழல் ஏற்பட்டதாக இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement