• Apr 20 2024

முன்னால் காதலனுடன் லிவிங்கில் வாழ்ந்த தங்கை - தகராறு செய்த அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்! SamugamMedia

Chithra / Mar 21st 2023, 6:49 pm
image

Advertisement

பெங்களூரில் எட்டு ஆண்டுகளிற்கு முன்னர் இளைஞர் ஒருவர் 20 துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தங்கையும் அவரது முன்னாள் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரின் ஜிகானி பகுதியிலுள்ள வெவ்வேறு இடங்களில் இருந்து 3 பிளாஸ்டிக் பைகளில் துண்டு துண்டுகளாக வெட்டபட்ட மனித உடல் பகங்களை பொலிசார் கண்டறிந்துள்ளனர். 

கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டமையால் இறந்தவர் யார் என்பதை கண்டறிவதில் போலிசாரிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால், மர்மமான தனிப்படை அமைத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். 

சமீபத்தில் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியலை தேடி எடுத்து விசாரணை நடத்தியதில் விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த லிங்கராஜ் என தெரியவந்துள்ளது. அதையடுத்து, லிங்கராஜின் குடும்பத்தாரிடம் விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். 

லிங்கராஜின் சகோதரி பாக்கியசிறியும், சிவபுத்திரா என்ற இளைஞனும் கல்லூரி காலங்களில் காதலித்து வந்துள்ளனர். 

இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தாரிற்கு தெரிய வர பாக்கியசிறிக்கு வேறொரு ஆணை மணம்முடித்து வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து சிவபுத்திரவும் வேறொரு பெண்ணை மணம்  முடித்துள்ளார். 

அவ்வாறிருப்பினும் இருவரும் யாருக்கும் தெரியால் ரகசியமாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த அண்ணன் லிங்கராஜ் தங்கையிடம் இது தொடர்பாக சண்டையிட பாக்கியசிறி அவரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். 

பின்னர் முன்னால் காதலுடன் இணைந்து  கொலையினை மறைக்க அண்ணனை 20 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார். இவை அனைத்தும் பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வர 8 ஆண்டுகளின் பின்னர் நாசிக்கில் ஒன்றாக வாழ்ந்து வந்த  காதலர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னால் காதலனுடன் லிவிங்கில் வாழ்ந்த தங்கை - தகராறு செய்த அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம் SamugamMedia பெங்களூரில் எட்டு ஆண்டுகளிற்கு முன்னர் இளைஞர் ஒருவர் 20 துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தங்கையும் அவரது முன்னாள் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரின் ஜிகானி பகுதியிலுள்ள வெவ்வேறு இடங்களில் இருந்து 3 பிளாஸ்டிக் பைகளில் துண்டு துண்டுகளாக வெட்டபட்ட மனித உடல் பகங்களை பொலிசார் கண்டறிந்துள்ளனர். கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டமையால் இறந்தவர் யார் என்பதை கண்டறிவதில் போலிசாரிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால், மர்மமான தனிப்படை அமைத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். சமீபத்தில் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியலை தேடி எடுத்து விசாரணை நடத்தியதில் விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த லிங்கராஜ் என தெரியவந்துள்ளது. அதையடுத்து, லிங்கராஜின் குடும்பத்தாரிடம் விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். லிங்கராஜின் சகோதரி பாக்கியசிறியும், சிவபுத்திரா என்ற இளைஞனும் கல்லூரி காலங்களில் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தாரிற்கு தெரிய வர பாக்கியசிறிக்கு வேறொரு ஆணை மணம்முடித்து வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து சிவபுத்திரவும் வேறொரு பெண்ணை மணம்  முடித்துள்ளார். அவ்வாறிருப்பினும் இருவரும் யாருக்கும் தெரியால் ரகசியமாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த அண்ணன் லிங்கராஜ் தங்கையிடம் இது தொடர்பாக சண்டையிட பாக்கியசிறி அவரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் முன்னால் காதலுடன் இணைந்து  கொலையினை மறைக்க அண்ணனை 20 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார். இவை அனைத்தும் பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வர 8 ஆண்டுகளின் பின்னர் நாசிக்கில் ஒன்றாக வாழ்ந்து வந்த  காதலர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement