• Apr 23 2024

இங்கிலாந்துக்கு மாற்றப்பட்டுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி! ரசிகர்கள் ஆரவாரம்!!

crownson / Dec 4th 2022, 8:43 am
image

Advertisement

FIFA சார்பில் தற்போது 22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

மேற்காசிய நாடான கட்டாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் உலகம் முழுவதுமிருந்தும் 32 அணிகள் பங்கேற்றுள்ளன.

லட்சக்கணக்கான ரசிகர்கள் கட்டாரில் நேரில் போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள்.

அதே போல் உலகில் மற்ற நாடுகளிலும் கால்பந்து காய்ச்சல் குறையவில்லை. ஆங்காஙகே ரசிகர்கள் ஒன்றாக கூடியிருந்து போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள்.

குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா,ஜெர்மனி உள்ளிடட நாடுகளில் விடுதிகள், மதுக்கூடங்கள் மற்றும் ப்பகளில் கூட்டமாக அமர்ந்து தங்களுக்கு பிடித்த அணியின் போட்டிகளை ரசிகர்கள் உற்சகமாக கண்டுகளித்து வருகிறார்கள்.

கொரோனா காலத்தில் கடுமையான பாதிப்பை சந்தித்து வந்த 'பப்'கள், தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.

கட்டாரில் நடக்கும் போட்டிகளை டிவியில் பார்ப்பதற்காக பப்புகளுக்கு ரசிகர்கள் படையெடுக்கின்றனர்.

அதனால் இங்கிலாந்தில் உள்ள பப்கள் நிரம்பி வழிகின்றன. உலகெங்கும் டிவி உள்ளிட்ட ஊடகங்களின் மூலம் கால்பந்து போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள், ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இப்படி கூட்டம் சேருவதனால் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி கட்டாரில் நடைபெறுகிறதா அல்லது இங்கிலாந்தில் நடைபெறுகிறதா என்ற வித்தியாசம் தெரியாமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

கடந்த நவம்பர் 27ல் நடந்த ஜப்பான் - கோஸ்டாரிகா போட்டியை 36 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது கடந்த 2018 ஆம்ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பையில் போட்டியை பார்த்த சராசரி பார்வையாளர்களை விட 74 % அதிகம்.

அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில்,  அமெரிக்கா - இங்கிலாந்து போட்டியை அமெரிக்காவில் 19.65 மில்லியன் பேரும், இங்கிலாந்தில 18 மில்லியன் பேரும் பார்த்துள்ளனர்.

என புள்ளி விபரம் தருகிறார்கள் சர்வதேச கால்பந்து சம்மேளன அதிகாரிகள் காப்பீட்டு நிறுவனமான சிம்ப்லி பிசினஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, மூன்றில் இரண்டு பங்கு ரசிகர்கள் பப்களில் மதுபானங்களை அருந்திக் கொண்டே போட்டியை ரசிக்கின்றனர்.

இதனால் பப்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்த நிதியாண்டில் 155 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் பப்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

கொரோனாவின் கோர தாணடவத்தால் முடங்கிக் கிடந்த சுற்றுலா தொழில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியால் சுற்றுலா மற்றும் அதன் இணை தொழில்கள் ஏற்றம் கண்டுள்ளன.


இங்கிலாந்துக்கு மாற்றப்பட்டுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி ரசிகர்கள் ஆரவாரம் FIFA சார்பில் தற்போது 22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேற்காசிய நாடான கட்டாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் உலகம் முழுவதுமிருந்தும் 32 அணிகள் பங்கேற்றுள்ளன.லட்சக்கணக்கான ரசிகர்கள் கட்டாரில் நேரில் போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள். அதே போல் உலகில் மற்ற நாடுகளிலும் கால்பந்து காய்ச்சல் குறையவில்லை. ஆங்காஙகே ரசிகர்கள் ஒன்றாக கூடியிருந்து போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா,ஜெர்மனி உள்ளிடட நாடுகளில் விடுதிகள், மதுக்கூடங்கள் மற்றும் ப்பகளில் கூட்டமாக அமர்ந்து தங்களுக்கு பிடித்த அணியின் போட்டிகளை ரசிகர்கள் உற்சகமாக கண்டுகளித்து வருகிறார்கள்.கொரோனா காலத்தில் கடுமையான பாதிப்பை சந்தித்து வந்த 'பப்'கள், தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. கட்டாரில் நடக்கும் போட்டிகளை டிவியில் பார்ப்பதற்காக பப்புகளுக்கு ரசிகர்கள் படையெடுக்கின்றனர். அதனால் இங்கிலாந்தில் உள்ள பப்கள் நிரம்பி வழிகின்றன. உலகெங்கும் டிவி உள்ளிட்ட ஊடகங்களின் மூலம் கால்பந்து போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள், ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.இப்படி கூட்டம் சேருவதனால் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி கட்டாரில் நடைபெறுகிறதா அல்லது இங்கிலாந்தில் நடைபெறுகிறதா என்ற வித்தியாசம் தெரியாமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.கடந்த நவம்பர் 27ல் நடந்த ஜப்பான் - கோஸ்டாரிகா போட்டியை 36 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2018 ஆம்ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பையில் போட்டியை பார்த்த சராசரி பார்வையாளர்களை விட 74 % அதிகம். அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில்,  அமெரிக்கா - இங்கிலாந்து போட்டியை அமெரிக்காவில் 19.65 மில்லியன் பேரும், இங்கிலாந்தில 18 மில்லியன் பேரும் பார்த்துள்ளனர். என புள்ளி விபரம் தருகிறார்கள் சர்வதேச கால்பந்து சம்மேளன அதிகாரிகள் காப்பீட்டு நிறுவனமான சிம்ப்லி பிசினஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, மூன்றில் இரண்டு பங்கு ரசிகர்கள் பப்களில் மதுபானங்களை அருந்திக் கொண்டே போட்டியை ரசிக்கின்றனர்.இதனால் பப்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்த நிதியாண்டில் 155 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் பப்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.கொரோனாவின் கோர தாணடவத்தால் முடங்கிக் கிடந்த சுற்றுலா தொழில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியால் சுற்றுலா மற்றும் அதன் இணை தொழில்கள் ஏற்றம் கண்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement