• Mar 29 2024

மிருசுவில் படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று

harsha / Dec 20th 2022, 11:30 am
image

Advertisement

மிருசுவில் படுகொலைகளின் 22 ஆம்  ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

 இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை மனதில் நிறுத்தி இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

நினைவேந்தலில் முதலில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அதன்பின்னர் சுடர் ஏற்றி,பூக்கள் தூவி  அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட  கொல்லப்பட்டவர்களின் உறவுககள், சமூக ஆர்வலர்கள்  கலந்து கொண்டனர்.
 

மேலும் தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்காக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமா ? சுய ஆட்சியா ?  என்ற பொது சன வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கூறுவோம்ஆகிய முக்கிய விடயங்களும் வலியுறுத்தப்பட்டன.



மிருசுவில் படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று மிருசுவில் படுகொலைகளின் 22 ஆம்  ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை மனதில் நிறுத்தி இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.நினைவேந்தலில் முதலில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அதன்பின்னர் சுடர் ஏற்றி,பூக்கள் தூவி  அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட  கொல்லப்பட்டவர்களின் உறவுககள், சமூக ஆர்வலர்கள்  கலந்து கொண்டனர். மேலும் தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்காக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமா சுய ஆட்சியா   என்ற பொது சன வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கூறுவோம்ஆகிய முக்கிய விடயங்களும் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement