குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது அண்ணன் மீது தம்பி ஒருவர் துப்பாக்கி சூடு மேற்கொண்ட சம்பவம் மாத்தளை-வில்கமுவ பகுதியில் பதிவாகியுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு வில்கமுவ பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடு மோதலாக மாறியதாகவும் இதன் காரணமாக இருவருக்கிடையிலும் துப்பாக்கி சூட்டு மோதல் இடம்பெற்றதாகவும் காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும் இச் சம்பவத்தில் காயமடைந்த மூத்த சகோதரர் (38வயது) சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய நபர் (காயமடைந்தவரின் இளைய சகோதரர்) சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக காவற்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.மேலும் இது குறித்த மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- காணொலி வாயிலாக சாணக்கியன் விடுத்துள்ள அவசர கோரிக்கை!
- EPDP-க்கு நேரடி சவால் விடுத்துள்ள இளைஞன்!
- இரண்டாவது நாளாக உணவு தவிர்ப்பு; யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் முடிவு சற்று நேரத்தில்!
- யாழ். பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா திடீர் முடிவு; மகிழ்ச்சி தரும் செய்தி!
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா
- இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 26 வயது தமிழ் முஸ்லிம் இளைஞருக்கு கிடைத்த வாய்ப்பு!
- “பயங்கரவாதிகளாகச் சென்ற யாழ் இளைஞர்கள் அதிரடிப்படை முன்னர் மண்டியிட்டனர்”- அரச ஊடகத்தின் அதர்மத் தலைப்பு
- வாட்ஸ் அப்பில் இல்லாதது அப்படி என்ன சிக்னல் அப்ளிகேஷனில் உள்ளது?
- வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழ் மட்ட தளம்பல் நிலை -மக்களுக்கு முக்கிய அறிவித்தல்..!
சமூக ஊடகங்களில்:
- ஃபேஸ்புக் : சமூகம் முகநூல்
- டிவிட்டர் : சமூகம் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : சமூகம் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : சமூகம் யு டியூப்