வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஓட்டமாவடி மற்றும் மாவடிச்சேனை பிரதேசத்தை 44, 41 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 30 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அவர்களின் வீடுகளில் வைத்து விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டனர்.
மேலதிக நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- வயோதிபரின் தலையை துண்டித்து ஓடும் கங்கையில் வீசிய நபர்! அக்குரஸ்ஸவில் கொடூரக் கொலை
- நிதி நிர்வாகத்திற்கான தொழில்நுட்ப உதவியை வழங்க அமெரிக்கா இணக்கம்
- பாடசாலை போக்குவரத்து கட்டணமும் அதிகரிப்பு!
- வரிசை வாழ்க்கை; நடைபாதையில் உணவு உண்ணும் இலங்கையர்கள்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka