• Mar 29 2024

யாழில் இலவச ஆங்கில கற்கை நெறிக்கு பணம் அறவிட்ட இரு பெண்கள் பாடசாலைகள் - விசாரணைகளில் அம்பலம்

Chithra / Jan 29th 2023, 2:08 pm
image

Advertisement

வடமாகாண கல்வி அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இலவச ஆங்கில கற்கை நெறியில், யாழில் உள்ள இரு பிரபல பெண்கள் பாடசாலைகளில் பணம் அறவிடப்பட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் புள்ளிகள் வெளியாகும் வரை அவர்களின் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வதற்காக வடக்கு கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இலவச ஆங்கில கற்கை நெறி  யாழில் உள்ள இரு பெண்கள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது.


குறித்த ஆங்கில கல்வியை பூர்த்தி செய்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில் இரு பாடசாலைகளிலும், ஒரு மாணவியிடம்  சுமார் 3,000 ரூபாய் வரை அறவிடப்பட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அறவிடப்பட்ட நிதி பாடசாலை நிறுவனமயப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு ஒன்றில் வைப்பிலிடப்பட்ட  நிலையில், குறித்த பணத்தை அப் பாடசாலை அதிபர் கையாண்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த ஒரு பாடசாலையில் ஏற்கனவே கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்த அதே பாடசாலை மாணவர்களிடம் உயர்தரத்திற்காக நிதி அறவிடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்றது.


மீண்டும் அதே பாடசாலையில் இலவசமாக கற்பிக்கப்பட்ட ஆங்கில கற்கை நெறிக்கி பணம் அறவிடப்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்ட வினவியபோது அவர் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன்,

குறித்த சம்பவம் உரிய முறையில் விசாரணை செய்து, மாகாண கல்வித் திணைக்களம் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவித்தார்.

யாழில் இலவச ஆங்கில கற்கை நெறிக்கு பணம் அறவிட்ட இரு பெண்கள் பாடசாலைகள் - விசாரணைகளில் அம்பலம் வடமாகாண கல்வி அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இலவச ஆங்கில கற்கை நெறியில், யாழில் உள்ள இரு பிரபல பெண்கள் பாடசாலைகளில் பணம் அறவிடப்பட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் புள்ளிகள் வெளியாகும் வரை அவர்களின் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வதற்காக வடக்கு கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இலவச ஆங்கில கற்கை நெறி  யாழில் உள்ள இரு பெண்கள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது.குறித்த ஆங்கில கல்வியை பூர்த்தி செய்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில் இரு பாடசாலைகளிலும், ஒரு மாணவியிடம்  சுமார் 3,000 ரூபாய் வரை அறவிடப்பட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அறவிடப்பட்ட நிதி பாடசாலை நிறுவனமயப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு ஒன்றில் வைப்பிலிடப்பட்ட  நிலையில், குறித்த பணத்தை அப் பாடசாலை அதிபர் கையாண்டுள்ளதாக தெரியவருகிறது.குறித்த ஒரு பாடசாலையில் ஏற்கனவே கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்த அதே பாடசாலை மாணவர்களிடம் உயர்தரத்திற்காக நிதி அறவிடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்றது.மீண்டும் அதே பாடசாலையில் இலவசமாக கற்பிக்கப்பட்ட ஆங்கில கற்கை நெறிக்கி பணம் அறவிடப்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்ட வினவியபோது அவர் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன்,குறித்த சம்பவம் உரிய முறையில் விசாரணை செய்து, மாகாண கல்வித் திணைக்களம் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement