• Apr 20 2024

வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம்..! samugammedia

Chithra / Jun 6th 2023, 3:10 pm
image

Advertisement

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பகல் களுதாவளையிலிருந்து செட்டிபாளையம் நோக்கு வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாத நிலையிலேயே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் - இருவர் படுகாயம். samugammedia மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று பகல் களுதாவளையிலிருந்து செட்டிபாளையம் நோக்கு வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாத நிலையிலேயே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement