இலங்கையில் அவசரமாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரட்ண ஜீவன் கூல், மக்கள் பிரதிநிதிகளே நாட்டை ஆளவேண்டும் என்று தெரிவித்தார்.
அத்துடன், தவிசாளர்கள் நாட்டை ஆள்வது ஜனநாயகம் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்தலுக்கான நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தலை ஜனாதிபதியால் தடுக்க முடியாது எனவும் இது ஜனநாயக விரோத செயற்பாடெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவியை வழங்கக்கூடாது எனவும் தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுவதாகவும் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் IMF நிதியுதவியை வழங்கக்கூடாது - ரட்ணஜீவன் கூல் SamugamMedia இலங்கையில் அவசரமாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரட்ண ஜீவன் கூல், மக்கள் பிரதிநிதிகளே நாட்டை ஆளவேண்டும் என்று தெரிவித்தார்.அத்துடன், தவிசாளர்கள் நாட்டை ஆள்வது ஜனநாயகம் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.எனவே, தேர்தலுக்கான நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.அத்துடன், தேர்தலை ஜனாதிபதியால் தடுக்க முடியாது எனவும் இது ஜனநாயக விரோத செயற்பாடெனவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவியை வழங்கக்கூடாது எனவும் தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுவதாகவும் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.