இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உரப்பிரச்சினை பற்றி எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது அதனை தெளிவுபடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல முற்பட்ட போது அவரின் கருத்தை செவிமடுத்த பிரதி சபாநாயகர் உரைக்கு நன்றி தெரிவித்தமைக்கு சபையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் உரப்பிரச்சினைக்கு புதிய அமைச்சர்கள் தீர்வு தரபோவத்காக கூறியுள்ள நிலையில் 2500 மில்லியன் பெறுமதியான குறித்த ஆய்வு தகவல்கள் மிகவும் காலதாமதமாகுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் உரையாற்றினார்
இந்த உரைக்கு மிக்க நன்றி என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த விடயத்திற்கு நன்றி தெரிவித்து தப்ப முடியாது எனவும் உர பிரச்சினைக்கு அரசாங்க தீர்வு வேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவ்வாறானதொரு திருட்டுத்தனமான சம்பவத்தை சுட்டிக்காட்டியமைக்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டாம் என தயாஶ்ரீ ஜயசேகர பிரதி சபாநாயகரை சாடியுள்ளார் என்பது குறிப்புடத்தக்கது.