வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டும் சிவலிங்கம் காணாமல் செய்யப்பட்ட செயலையும் இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை வன்மையாக கண்டிக்கின்றது.
இலங்கை இந்து சமயத் தொண்டர் சபையின் கண்டன அறிக்கையில்,
உடனடியாக இச் செயலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சிவலிங்கமும் சிலைகளும் மீள நிறுவப்பட வேண்டும்.
ஏற்கனவே கடந்த காலங்களில் சைவ சமயிகளின் வழிபாட்டிற்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட நேர்த்திக்கடன் நிறைவேற்றி வைத்த எட்டு அடி உயரமான சூலம் காணாமல் ஆக்கப்பட்டது.
தொடர் பின்னணியில் மேற்படி சம்பவத்தை மத நல்லிணக்கத்திற்கு பாரிய ஊறு விளைவிக்கும் இச்செயலை உரிய நோக்கில் அரசு அணுகி தீர்வு காண வேண்டும்.
ஆதி சிவன் கோவில்கள் மீதான தொடர் விரும்பதகாத செயற்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. தமிழ்ச் சைவர்களின் மனதை ஆழமாக பாதித்தது வருகின்றது.
இந்த விடயத்தில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சைவபெரியார்கள் செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பை வெளிகாட்ட வலியுறுத்துகின்றோம்.- என்றுள்ளது.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவில் விவகாரம்; இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை கண்டனம் samugammedia வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டும் சிவலிங்கம் காணாமல் செய்யப்பட்ட செயலையும் இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை வன்மையாக கண்டிக்கின்றது.இலங்கை இந்து சமயத் தொண்டர் சபையின் கண்டன அறிக்கையில்,உடனடியாக இச் செயலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.சிவலிங்கமும் சிலைகளும் மீள நிறுவப்பட வேண்டும்.ஏற்கனவே கடந்த காலங்களில் சைவ சமயிகளின் வழிபாட்டிற்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட நேர்த்திக்கடன் நிறைவேற்றி வைத்த எட்டு அடி உயரமான சூலம் காணாமல் ஆக்கப்பட்டது.தொடர் பின்னணியில் மேற்படி சம்பவத்தை மத நல்லிணக்கத்திற்கு பாரிய ஊறு விளைவிக்கும் இச்செயலை உரிய நோக்கில் அரசு அணுகி தீர்வு காண வேண்டும்.ஆதி சிவன் கோவில்கள் மீதான தொடர் விரும்பதகாத செயற்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. தமிழ்ச் சைவர்களின் மனதை ஆழமாக பாதித்தது வருகின்றது.இந்த விடயத்தில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சைவபெரியார்கள் செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பை வெளிகாட்ட வலியுறுத்துகின்றோம்.- என்றுள்ளது.