மஸ்கெலியா பிரதான வீதியில் நேற்று இரவு 70 வயது உடைய காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த ராமசாமி சுப்பிரமணியம் (சப்பானி) என்பவர் அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான டபிள்யூ.பி.என்.சி.0756. இலக்கம் கொண்ட பேருந்தில் மோதுண்டு பலியான சம்பவம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிசார் சென்று வீதியில் கிடந்த நபரை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டபோது அவர் மரணித்து இருந்தது தெரியவந்தது.
அவரது உடலம் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள சவச்சாலையில் வைக்க பட்டு இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி பணிப்புரையின் படி பதில் நீதவான் தமயந்தி அவர்கள் வந்து பார்வை இட்ட பின்னர் உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள பட்டது.
பிரேத பரிசோதனையில் பேருந்தில் மோதுண்டு பலியான உள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பேருந்தின் சாரதி கைது செய்ய பட்டதுடன் பேருந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க பட்டு உள்ளது.
சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் வாகன விபத்து - ஒருவர் உயிரிழப்பு samugammedia மஸ்கெலியா பிரதான வீதியில் நேற்று இரவு 70 வயது உடைய காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த ராமசாமி சுப்பிரமணியம் (சப்பானி) என்பவர் அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான டபிள்யூ.பி.என்.சி.0756. இலக்கம் கொண்ட பேருந்தில் மோதுண்டு பலியான சம்பவம் இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிசார் சென்று வீதியில் கிடந்த நபரை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டபோது அவர் மரணித்து இருந்தது தெரியவந்தது.அவரது உடலம் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள சவச்சாலையில் வைக்க பட்டு இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி பணிப்புரையின் படி பதில் நீதவான் தமயந்தி அவர்கள் வந்து பார்வை இட்ட பின்னர் உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள பட்டது.பிரேத பரிசோதனையில் பேருந்தில் மோதுண்டு பலியான உள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.அதனைத் தொடர்ந்து பேருந்தின் சாரதி கைது செய்ய பட்டதுடன் பேருந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க பட்டு உள்ளது.சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.