இந்தியாவில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ள விஜிபி குழுமமானது, வடமாகாணத்திலும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு முனைப்புடன் உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரின் செயளாளர் எஸ்.வாகீசன் தெரிவித்துள்ளார்.
விஜிபி குழுமத்தினுடைய நிறுவுனரும் அதனுடைய பிரதம நிர்வாகியாகியுடனான கலந்துரையாடலில்
வடக்கு மாகாண ஆளுநரின் செயளாளர் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
வி.ஜி.பி குழுமத்தினுடைய முதலீடுகளைக் கூட முதலிட சந்தர்ப்பம் வழங்க முடியும் என்றும் என்று குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகம் இது தொடர்பில் அதிக கரிசனை காட்டுவதன் மூலம் கூடுதலான முதலீடுகளைக் கொண்டு வர முடியும் என்றும் வடக்கு மாகாண ஆளுநரின் செயளாளர் குறிப்பிட்டிருந்தார்.
இவற்றுடன் வட மாகாண உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு உள்ளூர் மட்டங்களில் சுற்றுலாத் துறையை விருத்தி செய்வது தொடர்பான விடயங்கள் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆகவே அவர்களும் சுற்றுலாப் பணியகத்துடத்துடன் இணைந்துசெயற்படுவதன் மூலம் இவ்வாறான சுற்றுலாத்துறை சார் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் வடக்கு மாகாண ஆளுநரின் செயளாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கு சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முனைப்புடன் உள்ள விஜிபி குழுமம் - வடக்கு ஆளுநரின் செயளாளர் தெரிவிப்பு இந்தியாவில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ள விஜிபி குழுமமானது, வடமாகாணத்திலும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு முனைப்புடன் உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரின் செயளாளர் எஸ்.வாகீசன் தெரிவித்துள்ளார்.விஜிபி குழுமத்தினுடைய நிறுவுனரும் அதனுடைய பிரதம நிர்வாகியாகியுடனான கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயளாளர் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.வி.ஜி.பி குழுமத்தினுடைய முதலீடுகளைக் கூட முதலிட சந்தர்ப்பம் வழங்க முடியும் என்றும் என்று குறிப்பிட்டார்.வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகம் இது தொடர்பில் அதிக கரிசனை காட்டுவதன் மூலம் கூடுதலான முதலீடுகளைக் கொண்டு வர முடியும் என்றும் வடக்கு மாகாண ஆளுநரின் செயளாளர் குறிப்பிட்டிருந்தார்.இவற்றுடன் வட மாகாண உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு உள்ளூர் மட்டங்களில் சுற்றுலாத் துறையை விருத்தி செய்வது தொடர்பான விடயங்கள் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.ஆகவே அவர்களும் சுற்றுலாப் பணியகத்துடத்துடன் இணைந்துசெயற்படுவதன் மூலம் இவ்வாறான சுற்றுலாத்துறை சார் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் வடக்கு மாகாண ஆளுநரின் செயளாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.