சுன்னாகத்தில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் மூவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் சட்டத்தரணி மூலம் மூவர் சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் மூவரும் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மூவரையும் எதிர்வரும் 2023.02.07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.