பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக நிறைவடைந்தது.
இந்நிலையில் இம்முறையும் முக்கிய பிரபலங்கள் பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொண்டனர்.
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய இலங்கையைச் சேர்ந்த ஜனனிக்கு இளையதளபதி விஜயின் தளபதி67 திரைப்படத்தில் நடிப்பதற்குரிய வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, பிக்பாஸ் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் வீட்டிலுள்ள முக்கால்வாசி போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
இலங்கையைச் சேர்ந்த ஜனனி எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டை வெளியேற்றப்பட்டார் . இவர் வெளியேறிய பின்னர் இவர் அமுதவாணன் மிகவும் கஷ்டப்பட்டு அழுது புலம்பியுள்ளார்.
இந்த காரணத்தை பலர் கேட்ட போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைக் கொடுத்தார். இந்த நிலையில் அதே கேள்வியை ப்ரீஸ் டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அமுதவாணனின் மனைவியும் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சுமார் 13 இலட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய அமுதவாணன் சமீபத்தில் ஒரு யுடியுப் சேனலிலுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார்.
அதில்,“ எனக்கும் ஜனனிக்கு இடையிலுள்ள ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தான் தெரியும். அவள் செய்யும் முகப்பாவனைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், கியூட்டாகவும் இருக்கும். அவருடன் வெளியில் சென்றதும் பேசினேன். ஜனனியின் தம்பிக்கூட நன்றி என கூறினார்” எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் “ உங்களுக்கு ஜனனிக்கும் ஒரு உறவும் இல்லையென்றால் ஏன் அழுதீர்கள் என கேட்டுள்ளார்கள்.
𝐀𝐦𝐮𝐭𝐡𝐚𝐯𝐚𝐧𝐚𝐧 𝐚𝐛𝐨𝐮𝐭 #𝐉𝐚𝐧𝐚𝐧𝐲
👏👌#Azeem
#BiggBossTamil
#biggbosstamilseason6
#BiggBossTamil6
#Vikraman
#MakkalNayaganAzeem
pic.twitter.com/TyGSSn5iUc