• Mar 29 2024

ஜூலை 10ற்குள் தீர்வு வேண்டும்..! இல்லையெனில் சர்வதேசத்திடம் செல்வோம்- சாணக்கியன் கடும் முடிவு.! samugammedia

Sharmi / Jun 10th 2023, 3:34 pm
image

Advertisement

எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதிக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் சர்வதேச சமூகத்திடம் செல்லப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சிங்கள ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரையில் தீர்வு காணப்படவில்லை எனவும் ஜனாதிபதிக்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகாணத் தவறினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 10ற்குள் தீர்வு வேண்டும். இல்லையெனில் சர்வதேசத்திடம் செல்வோம்- சாணக்கியன் கடும் முடிவு. samugammedia எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதிக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் சர்வதேச சமூகத்திடம் செல்லப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் சிங்கள ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரையில் தீர்வு காணப்படவில்லை எனவும் ஜனாதிபதிக்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகாணத் தவறினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement