யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மதமாற்ற கொள்கை உடையவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மதமாற்ற கொள்கையுடைய அரச அதிபர் யாழ் மாவட்டத்திற்கு வேண்டாம் என தெரிவித்து சிவசேனை அமைப்பினரால் யாழ் மாவட்ட செயலக முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன்,
இலங்கை சிவபூமி .அதேபோன்று வட மாகாணமும் சிவபூமி ,இந்த மண்ணின் ஆதிக்குடிகள் சைவர். சைவ மதத்தினை அவமதிக்கின்ற ,சைவ கோயில்களை சாத்தான் கோயில்கள் என்று சொல்லுகின்ற அன்னியர்களுக்கு இந்த மண்ணில் இடமில்லை.
சைவ மக்களை சாத்தான் கோயில்களுக்கு போக வேண்டாம் என்று கூறும் ஒருவர் யாழ்ப்பாண ஆட்சியாராக வருவதாக தெரிகிறது.இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.மத மாற்றிகள் யாழ்.மாவட்டத்திற்கு தலைமை தாங்க முடியாது.
எந்த அரசாங்கம் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றதோ,மண்ணின் மரபுகளை,மகிந்தர்களை அழித்தொழிக்க நினைக்கின்ற அரசாங்கம் நீடிக்காது ,நிலைக்காது என்பது வரலாறு.கிளிநொச்சி,முல்லைத்தீவு சபைகளின் மதமாற்றுத் தலைவராக இருந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியாளராக வர முடியுமா?அதற்கு நாங்கள் விட மாட்டோம் என தெரிவித்தார்.
சிவபூமியில் மாற்று மதத்தவர் ஆட்சியாளராக வர விடமாட்டோம்- சச்சிதானந்தம் ஆவேசம் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மதமாற்ற கொள்கை உடையவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மதமாற்ற கொள்கையுடைய அரச அதிபர் யாழ் மாவட்டத்திற்கு வேண்டாம் என தெரிவித்து சிவசேனை அமைப்பினரால் யாழ் மாவட்ட செயலக முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன், இலங்கை சிவபூமி .அதேபோன்று வட மாகாணமும் சிவபூமி ,இந்த மண்ணின் ஆதிக்குடிகள் சைவர். சைவ மதத்தினை அவமதிக்கின்ற ,சைவ கோயில்களை சாத்தான் கோயில்கள் என்று சொல்லுகின்ற அன்னியர்களுக்கு இந்த மண்ணில் இடமில்லை.சைவ மக்களை சாத்தான் கோயில்களுக்கு போக வேண்டாம் என்று கூறும் ஒருவர் யாழ்ப்பாண ஆட்சியாராக வருவதாக தெரிகிறது.இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.மத மாற்றிகள் யாழ்.மாவட்டத்திற்கு தலைமை தாங்க முடியாது.எந்த அரசாங்கம் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றதோ,மண்ணின் மரபுகளை,மகிந்தர்களை அழித்தொழிக்க நினைக்கின்ற அரசாங்கம் நீடிக்காது ,நிலைக்காது என்பது வரலாறு.கிளிநொச்சி,முல்லைத்தீவு சபைகளின் மதமாற்றுத் தலைவராக இருந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியாளராக வர முடியுமாஅதற்கு நாங்கள் விட மாட்டோம் என தெரிவித்தார்.