மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற இளைஞர் ஒருவர் நேற்று (26) தாந்தாமலை குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
களுவாஞ்சிக்குடி எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மோகனசிங்கம் பிரகதீசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாந்தாமலை முருகள் ஆலைய வருடாந்த திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேச மக்கள் ஆலைய வழிபாட்டுக்கு சென்றனர்.
இதன்போது ஆலய வழிபாட்டுக்கு சென்ற குறித்த இளைஞனும் அவரது நண்பர்களுமாக தாந்தாமலை குளத்தில் நீராடியய போது குறித்த இளைஞன் நீரிழ் முழுகியதையடுத்து அவரை நண்பர்கள் காப்பாற்றி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு தமிழர் பகுதியில் சோகம் samugammedia மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற இளைஞர் ஒருவர் நேற்று (26) தாந்தாமலை குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.களுவாஞ்சிக்குடி எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மோகனசிங்கம் பிரகதீசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தாந்தாமலை முருகள் ஆலைய வருடாந்த திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேச மக்கள் ஆலைய வழிபாட்டுக்கு சென்றனர்.இதன்போது ஆலய வழிபாட்டுக்கு சென்ற குறித்த இளைஞனும் அவரது நண்பர்களுமாக தாந்தாமலை குளத்தில் நீராடியய போது குறித்த இளைஞன் நீரிழ் முழுகியதையடுத்து அவரை நண்பர்கள் காப்பாற்றி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.