• Mar 09 2026

இலங்கையில் இவ்வாண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு! 60 பேர் உயிரிழப்பு

Chithra / Dec 31st 2025, 9:01 pm
image

 

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில்  பெரும்பாலானவை பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இவ்வாண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு 60 பேர் உயிரிழப்பு  2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில்  பெரும்பாலானவை பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement