• Jun 16 2024

மாகஸ்தோட்ட பகுதியில் கழுத்தில் கயிறு இறுகி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

Tamil nila / Feb 11th 2024, 7:41 pm
image

Advertisement

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியில் கழுத்தில் கயிறு இறுகி 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,

அதாவது தனிவீட்டில் வசிக்கும் பாடசாலை சிறுவன் ஒருவர் வீட்டுக்கு அருகில் தேயிலை தோட்டத்தில் சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடி கொண்டிருந்த போது தனது கழுத்தில் கயிறு இறுகிய நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று (11) பகல் 01 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த சம்பவத்தில் சிவகுமார் டிலக்சன் வயது (12) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுவரெலியா குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.

மாகாஸ்தோட்ட பகுதியில் தனிவீட்டில் தாய் மற்றும் பெண் பிள்ளைகள் இருவர் ஆண் பிள்ளை ஒருவருடன் நால்வர் வசித்து வருகின்றனர்.

தனது கணவன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிய பின் தாய் பிள்ளைகளை படிக்கவைத்து வாழ்ந்து வரும் நிலையில் மூத்த மகள் பல்கலைகழக படிப்புக்கு சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் என மூவர் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வழமைப் போல சிறுவன் உயிர் பிரிந்த இடத்தில் சவுக்கு மரம் ஒன்றில் கயிறு கட்டி விளையாடி கொண்டிறுந்துள்ளார்.

தாய் தனக்கு தலைவலியென வீட்டில் படுத்து இருந்த நிலையில் பகல் ஒரு மணியலவில் மரத்தில் விளாயாடிய சிறுவன் கழுத்தில் கயறு இறுகி துடிக்கிறான், காப்பாற்றுங்கள் என சம்பவத்தை அவதானித்த அருகில் உள்ள வீட்டார் கூச்சலிட்டுள்ளனர்.

இதையடுத்து மரத்துக்கு அருகில் ஒடியவர்கள் சிறுவனை மீட்டப்போதிலும் சிறுவன் மயக்கத்தில் இருப்பதாக உணர்ந்து 1990 அவசர அம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பின் அவசர அம்புலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தந்து வைத்தியர்கள் சிறுவனை பரிசோதித்த போது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.





மாகஸ்தோட்ட பகுதியில் கழுத்தில் கயிறு இறுகி 12 வயது சிறுவன் உயிரிழப்பு நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியில் கழுத்தில் கயிறு இறுகி 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,அதாவது தனிவீட்டில் வசிக்கும் பாடசாலை சிறுவன் ஒருவர் வீட்டுக்கு அருகில் தேயிலை தோட்டத்தில் சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடி கொண்டிருந்த போது தனது கழுத்தில் கயிறு இறுகிய நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று (11) பகல் 01 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த இந்த சம்பவத்தில் சிவகுமார் டிலக்சன் வயது (12) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுவரெலியா குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.மாகாஸ்தோட்ட பகுதியில் தனிவீட்டில் தாய் மற்றும் பெண் பிள்ளைகள் இருவர் ஆண் பிள்ளை ஒருவருடன் நால்வர் வசித்து வருகின்றனர்.தனது கணவன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிய பின் தாய் பிள்ளைகளை படிக்கவைத்து வாழ்ந்து வரும் நிலையில் மூத்த மகள் பல்கலைகழக படிப்புக்கு சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் என மூவர் வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் வழமைப் போல சிறுவன் உயிர் பிரிந்த இடத்தில் சவுக்கு மரம் ஒன்றில் கயிறு கட்டி விளையாடி கொண்டிறுந்துள்ளார்.தாய் தனக்கு தலைவலியென வீட்டில் படுத்து இருந்த நிலையில் பகல் ஒரு மணியலவில் மரத்தில் விளாயாடிய சிறுவன் கழுத்தில் கயறு இறுகி துடிக்கிறான், காப்பாற்றுங்கள் என சம்பவத்தை அவதானித்த அருகில் உள்ள வீட்டார் கூச்சலிட்டுள்ளனர்.இதையடுத்து மரத்துக்கு அருகில் ஒடியவர்கள் சிறுவனை மீட்டப்போதிலும் சிறுவன் மயக்கத்தில் இருப்பதாக உணர்ந்து 1990 அவசர அம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.பின் அவசர அம்புலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தந்து வைத்தியர்கள் சிறுவனை பரிசோதித்த போது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement