தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் (AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு, பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்ப்போர் கூடத்தில் இன்று(18) இடம்பெற்றது.
“முன்னேற்றம் பெறும் சந்தைகளில் தொழில்நுட்பத் தொழில் முனைவோர்; சுறுசுறுப்பின் மூலம் நிறுவன மாற்றம்” (“Technopreneurship in Emerging Markets; Organizational Transformation through Agitity”) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த சர்வதேச ஆய்வரங்கில்
உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். எம். ஜுனைடீன் உரையாற்றியதுடன் ஆய்வு மாநாட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வாளர்களின் ஆய்வு கட்டுரைகளின் சுருக்கங்களை உள்ளடக்கிய சுருக்கக்கோவை நூல் (Book of Abstracts) ஐயும் வெளியிட்டு வைத்தார்.
(AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டில் 136 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
(AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டின் தொடக்க அமர்வில் இணைப்பாளர் கலாநிதி எம்.ஐ.எம். றியாத் வரவேற்புரையையும் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, மாநாட்டின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகளை விளக்கும் வகையில் உரைகளையும் நிகழ்த்தினர்.
முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் ரோஷன் அஜ்வர்ட் , தனது முக்கிய உரையில் (Keynote Address) நிகழ்வின் தலைப்பிற்கு ஏற்ப ஆழமான கருத்துகளை பகிர்ந்தார்.
நிகழ்வின் போது முகாமைத்துவ வர்த்தக பீடத்திலிருந்து புதியதாக பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.யாதவன் ஜெயராம், பார்ட்லீட் ரிலிகேர் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, "செல்வத்தின் விதைகள்: முதலீடு செய்யத் தொடங்குங்கள், வளரத் தொடங்குங்கள்" என்ற தலைப்பில் தனது பார்வையை நிகழ்வில் எடுத்துரைத்தார்.
இங்கு அனுசரணையாளர்களுக்கான நன்றியுரையும் கௌரவிப்பும் இடம்பெற்றது. அத்துடன் (AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டின் செயலாளரும் விரிவுரையாளருமான தபாணி றஷிட் நன்றியுரை நிகழ்த்தினார்.
(AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து திருநெல்வேலி சமூக விஞ்ஞான ஆராச்சி மையத்தின் ஸ்தாபக தலைவர் கலாநிதி ஜி. பரமசிவம், கலாநிதி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அசோசியேட் பேராசிரியர் கலாநிதி பி. விருந்தா, தயானந்த சாகர் பல்கலைக்கழகத்தின் அசோசியேட் பேராசிரியர் கலாநிதி றூஹி குர்சாட்கான், தயானந்த சாகர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கலாநிதி நயானா பரப்ஹாஸ், தயானந்த சாகர் பல்கலைக்கழகத்தின் அசோசியேட் பேராசிரியர் கலாநிதி மகேஸ்வரி, கலாநிதி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கலாநிதி சுபாசினி, அமெரிக்கன் கல்லூரியின் எஸ். அருள் லிட்டில் செனிட்டா மற்றும் பி. வென்ஷிஹ’ மோனோலின் ஆகியோர் கலந்து கொண்டனர் .
நிகழ்வின்போது கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பொறியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியரா கலாநிதி எம்.ஏ.எல். அப்துல் ஹலிம், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
தென்கிழக்குப் பல்கலையில் -14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் (AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு, பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்ப்போர் கூடத்தில் இன்று(18) இடம்பெற்றது.“முன்னேற்றம் பெறும் சந்தைகளில் தொழில்நுட்பத் தொழில் முனைவோர்; சுறுசுறுப்பின் மூலம் நிறுவன மாற்றம்” (“Technopreneurship in Emerging Markets; Organizational Transformation through Agitity”) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த சர்வதேச ஆய்வரங்கில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். எம். ஜுனைடீன் உரையாற்றியதுடன் ஆய்வு மாநாட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வாளர்களின் ஆய்வு கட்டுரைகளின் சுருக்கங்களை உள்ளடக்கிய சுருக்கக்கோவை நூல் (Book of Abstracts) ஐயும் வெளியிட்டு வைத்தார்.(AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டில் 136 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.(AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டின் தொடக்க அமர்வில் இணைப்பாளர் கலாநிதி எம்.ஐ.எம். றியாத் வரவேற்புரையையும் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, மாநாட்டின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகளை விளக்கும் வகையில் உரைகளையும் நிகழ்த்தினர்.முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் ரோஷன் அஜ்வர்ட் , தனது முக்கிய உரையில் (Keynote Address) நிகழ்வின் தலைப்பிற்கு ஏற்ப ஆழமான கருத்துகளை பகிர்ந்தார்.நிகழ்வின் போது முகாமைத்துவ வர்த்தக பீடத்திலிருந்து புதியதாக பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.யாதவன் ஜெயராம், பார்ட்லீட் ரிலிகேர் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, "செல்வத்தின் விதைகள்: முதலீடு செய்யத் தொடங்குங்கள், வளரத் தொடங்குங்கள்" என்ற தலைப்பில் தனது பார்வையை நிகழ்வில் எடுத்துரைத்தார்.இங்கு அனுசரணையாளர்களுக்கான நன்றியுரையும் கௌரவிப்பும் இடம்பெற்றது. அத்துடன் (AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டின் செயலாளரும் விரிவுரையாளருமான தபாணி றஷிட் நன்றியுரை நிகழ்த்தினார்.(AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து திருநெல்வேலி சமூக விஞ்ஞான ஆராச்சி மையத்தின் ஸ்தாபக தலைவர் கலாநிதி ஜி. பரமசிவம், கலாநிதி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அசோசியேட் பேராசிரியர் கலாநிதி பி. விருந்தா, தயானந்த சாகர் பல்கலைக்கழகத்தின் அசோசியேட் பேராசிரியர் கலாநிதி றூஹி குர்சாட்கான், தயானந்த சாகர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கலாநிதி நயானா பரப்ஹாஸ், தயானந்த சாகர் பல்கலைக்கழகத்தின் அசோசியேட் பேராசிரியர் கலாநிதி மகேஸ்வரி, கலாநிதி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கலாநிதி சுபாசினி, அமெரிக்கன் கல்லூரியின் எஸ். அருள் லிட்டில் செனிட்டா மற்றும் பி. வென்ஷிஹ’ மோனோலின் ஆகியோர் கலந்து கொண்டனர் .நிகழ்வின்போது கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பொறியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியரா கலாநிதி எம்.ஏ.எல். அப்துல் ஹலிம், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.