• Sep 17 2024

மத்ரசாவில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் மாயம்! திருகோணமலையில் சம்பவம்

Chithra / May 21st 2024, 3:07 pm
image

Advertisement


மத்ரசா ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயது மசூட் அஸ்மட் எனும் மாணவனே காணமல் போயுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் மத்ரசாவில் இருந்து கடந்த 10 ஆம் திகதி  ரொட்டவெவ கிராமத்துக்கு சென்ற நிலையில் கடந்த 16 ஆம் திகதி  காணாமல் போயுள்ளார். 

கடந்த  18 ஆம் திகதி இது சம்பந்தமாக அந்த மாணவனின் தந்தை பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


மத்ரசாவில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் மாயம் திருகோணமலையில் சம்பவம் மத்ரசா ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயது மசூட் அஸ்மட் எனும் மாணவனே காணமல் போயுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த மாணவன் மத்ரசாவில் இருந்து கடந்த 10 ஆம் திகதி  ரொட்டவெவ கிராமத்துக்கு சென்ற நிலையில் கடந்த 16 ஆம் திகதி  காணாமல் போயுள்ளார். கடந்த  18 ஆம் திகதி இது சம்பந்தமாக அந்த மாணவனின் தந்தை பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.சம்பவம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement