• Sep 29 2024

எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 17 பேர் கைது!

Chithra / Sep 29th 2024, 9:40 am
image

Advertisement

 

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நேற்று 

கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை அங்கு வந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 17 பேர் கைது  ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை அங்கு வந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement