பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0712 595 555 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும்.
மேலும், பஸ் சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும்,
ரயில் சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு 1971 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் தொடர்பு கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை தமிழ் மொழியில் முறைப்பாடுகளை வழங்குவதற்கு 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் தமிழ் மக்களுக்காக சேவையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு 106 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
24 மணி நேர விசேட தொலைபேசி இலக்கம் - இலங்கை மக்களுக்கு வந்த அறிவிப்பு பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0712 595 555 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும்.மேலும், பஸ் சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும், ரயில் சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு 1971 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் தொடர்பு கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.இதேவேளை தமிழ் மொழியில் முறைப்பாடுகளை வழங்குவதற்கு 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் தமிழ் மக்களுக்காக சேவையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு 106 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.