• Jul 27 2024

பாகிஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் 28 பேர் பலி...!

Anaath / May 29th 2024, 1:43 pm
image

Advertisement

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உள்பட 28 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தானது பாகிஸ்தான், கராச்சி நகரில் ஏற்பட்டுள்ளது.

அங்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்த 28 பேர் பலியாகினர்.

துர்பத் முதல் குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, வாசுக் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்துக்குக் காரணம், பேருந்து அதிவேகத்தில் இயக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது. ஆனால், பேருந்தின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாக, அந்நாட்டு  ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் சிக்கி காயமடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் 28 பேர் பலி. பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உள்பட 28 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தானது பாகிஸ்தான், கராச்சி நகரில் ஏற்பட்டுள்ளது.அங்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்த 28 பேர் பலியாகினர்.துர்பத் முதல் குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, வாசுக் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்துக்குக் காரணம், பேருந்து அதிவேகத்தில் இயக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது. ஆனால், பேருந்தின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாக, அந்நாட்டு  ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.விபத்தில் சிக்கி காயமடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement