• Sep 08 2024

கனடாவில் காணாமல் போன 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு

Sharmi / Jul 27th 2024, 1:21 pm
image

Advertisement

கனடாவின் மிஸ்ஸிசாகாவின் எரின்டெல் பூங்கா பகுதியில் சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் மாலை முதல் குறித்த சிறுவனை காணவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் தேடுதல் பணிகளில் படையினரும் அவசர சேவை பிரிவினரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

குறித்த தேடுதலின் போதே நேற்றையதினம் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று வயதான ஸயிட் அப்துல்லா என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த சிறுவன் வாய் பேச முடியாத சிறுவனாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பூங்காவில் எரிந்தேல்விற்கு அருகிலுள்ள ஒரு ஓடையில் ஸயிட் அப்துல்லாவின் உடலைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கனடாவில் காணாமல் போன 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு கனடாவின் மிஸ்ஸிசாகாவின் எரின்டெல் பூங்கா பகுதியில் சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.நேற்று முன்தினம் மாலை முதல் குறித்த சிறுவனை காணவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் தேடுதல் பணிகளில் படையினரும் அவசர சேவை பிரிவினரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.குறித்த தேடுதலின் போதே நேற்றையதினம் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மூன்று வயதான ஸயிட் அப்துல்லா என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறதுகுறித்த சிறுவன் வாய் பேச முடியாத சிறுவனாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பூங்காவில் எரிந்தேல்விற்கு அருகிலுள்ள ஒரு ஓடையில் ஸயிட் அப்துல்லாவின் உடலைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement