நாடாளாவிய ரீதியில் 39267 ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்தும் தற்போது வரையில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை என்று கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மீதான விவாதங்களின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கடந்த 2023.01.17 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து நீதிமன்றால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான போட்டிப்பரீட்சை இடைநிறுத்தப்பட்டு தற்போது வரை பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை.
நாடளாவிய ரீதியில் 39267 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. கல்விச் சுற்றிக்கையின் படி 2604 வெற்றிடங்கள் அகற்றப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டின் டிப்ளோமா மாகாணப் பாடசாலைகளுக்கு கடந்த 2025.05.02 ஆம் திகதியிலிருந்து நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் பாடசாலைகளுக்கு 345 நியமனங்களும், தேசிய பாடசாலைகளுக்கு 968 நியமனங்களும், ஆங்கில பாடசாலைகளுக்கு 381 நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் சிங்களப் பாடசாலைகளில் - 2281 நியமனங்களும் தமிழ் மொழி பாடசாலைகளில் 1401 நியமனங்களும் ஆங்கில மொழி பாடசாலைகளுக்கு 679 நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.- என்றார்.
நாடளாவிய ரீதியில் 39267 ஆசிரியர் வெற்றிடங்கள்; தற்போது வரையில் பட்டதாரிகளுக்கு நியமனம் இல்லை - உயர்கல்வி பிரதியமைச்சர் நாடாளாவிய ரீதியில் 39267 ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்தும் தற்போது வரையில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை என்று கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மீதான விவாதங்களின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கடந்த 2023.01.17 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து நீதிமன்றால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான போட்டிப்பரீட்சை இடைநிறுத்தப்பட்டு தற்போது வரை பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை. நாடளாவிய ரீதியில் 39267 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. கல்விச் சுற்றிக்கையின் படி 2604 வெற்றிடங்கள் அகற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் டிப்ளோமா மாகாணப் பாடசாலைகளுக்கு கடந்த 2025.05.02 ஆம் திகதியிலிருந்து நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் பாடசாலைகளுக்கு 345 நியமனங்களும், தேசிய பாடசாலைகளுக்கு 968 நியமனங்களும், ஆங்கில பாடசாலைகளுக்கு 381 நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் சிங்களப் பாடசாலைகளில் - 2281 நியமனங்களும் தமிழ் மொழி பாடசாலைகளில் 1401 நியமனங்களும் ஆங்கில மொழி பாடசாலைகளுக்கு 679 நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.- என்றார்.