• Sep 21 2024

நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 பேர் கைது

Anaath / Jul 30th 2024, 12:52 pm
image

Advertisement

அம்பாறையில் நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 சந்தேக நபர்களை பொலிஸார்  கைது செய்ததுடன்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

 அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியிலுள்ள நிறமூட்டும் தொழிற்சாலையில்  நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கடந்த திங்கட்கிழமை(29) இரவு  இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.

இதற்கமைய செயற்பட்ட பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதுடன் ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த 4 சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் 20, 18, 17, 17, வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 பேர் கைது அம்பாறையில் நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 சந்தேக நபர்களை பொலிஸார்  கைது செய்ததுடன்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியிலுள்ள நிறமூட்டும் தொழிற்சாலையில்  நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கடந்த திங்கட்கிழமை(29) இரவு  இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.இதற்கமைய செயற்பட்ட பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதுடன் ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த 4 சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் 20, 18, 17, 17, வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement